Thursday, December 16, 2010

சித்திரமும் கைப்பழக்கம்..

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

காலைப்பனி, கதிரவன்
குளிர்காற்று, குருவிச்சத்தம்
இவற்ற்றை ரசிக்க
அதிகாலை எழுதல் பழகு.

எதுகை மோனை
காதல் கோபம்
இவற்ற்றை ரசிக்க
தமிழ் படித்தல் பழகு.

கடல் கடந்து சென்றாலும்
பெயர் நிலை நிருட்ட
தமிழில் புரிந்து
பல மொழி பழகு.

மரமும் கொடியும்
அழகாய் தெரியும்
நாட்களை ரசிக்க
காதல் பழகு.

வீரம் காட்ட
குரோதம் நீக்க
ஆழ் மனம் அடங்க
ரௌத்திரம் பழகு.

எல்லா கேள்விக்கும்
விடை ஒருவன் அறிவான்
என்று நம்பி
ஆத்திகம் பழகு.

அத்தனை பதிலயும்
அப்படியே நம்பாமல்
ஆழ்ந்து யோசிக்க
நாத்திகம் பழகு.

எல்லா நிலையிலும்
உனக்கு மேல் ஒருவன்
இருப்பதை எண்ணி
அடக்கம் பழகு.

உன்னிடம் இருப்பது
உழைப்பால் வந்ததாயின்
உரிமை கொண்டாடி
ஆணவம் பழகு.

 பத்து வயதில்
எனக்கேன் இதெல்லாம்?
பதினெட்டில் புரிந்தது
சித்திரமும் கைப்பழக்கம்.

4 comments: