Sunday, June 23, 2013

தொட்டில் பழக்கம்

நேற்று உடையாத பொம்மை இன்று உடையுமா என்று தொட்டிலில் இருந்த படி யோசனை

இன்றைய கதையிலாவது ராஜா போரில் தோற்றாரா என்ற சிந்தனை

இன்றும் அரிசிக்கலவை  தானா இல்லை அப்பாவுக்கு மதிய உணவுடன் அனுப்பப்படும் சத்தமெழுப்பும் அப்பளத்துண்டை தர அம்மாவுக்கு தைரியம் வருமா என்ற கவலை

முத்தமிடுகையில் குத்தும் அப்பாவின்  மீசையை தவிர்க்க முகத்தை இன்று  எந்த திசையில் திருப்பலாம் என்ற மனக்குழப்பம்

நான் சொன்ன முதல் வார்த்தை 'அம்மா' தான் என்றும் 'அப்பா' தான் என்றும் சண்டையை இன்றைக்கும் தூங்குவதைப்போல் நடித்தால் கேட்டு மகிழமுடியுமா?


இப்படி பழக்கப்படுத்திவிட்டு

இன்று ஞாயிறு ஆயிற்றே பேருந்து வருமோ வராதோ சம்பளத்தில் பிடித்துவிடுவானோ என்று கவலைப்பட கற்றுக்கொடுத்தது தான் யார்?



No comments:

Post a Comment